நான் தான் சராசரி பெண் பேசுகிறேன். நீங்கள் நேற்று பார்த்த யாரோ ஒருத்தியை போன்ற முக ஜாடை எனக்கு. ஆயிரம் எண்ண ஓட்டங்களும், கற்பனைகளும் ஆசைகளும் பெருக்கெடுத்து ஓடும் பெண் நான். சில தடவை வார்த்தைகளிலும் பல தடவை மெளனங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் அவற்றை.
கிட்ட தட்ட 25 வயது நிரம்பிய எனது வாழ்க்கையில் வியப்பாய் இருக்கிறது திருமணம் என்ற ஒரு வார்த்தை. எத்தனையோ கனவுகளோடு ஆரம்பித்த இந்த பயணம் நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொன்றாக மாறி கொண்டே வருகிறது.
எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு தளமாக இதை உருவாக்கியுள்ளேன். எதிர்கால கணவனை தேடும் வேட்கைக்காகயில்லை. எனது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் சில மாற்றங்களை முடிந்தால் செய்யலாம் என்ற முயற்சி தான் இது. எனக்கென்று அடையாளம் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி செய்வதில் எத்தனை பேர் என் எழுத்தையும் எத்தனை பேர் என்னை பற்றி ஆராய்வார்கள் என்று எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை.
ஸ்பென்சரில் சைட் அடிக்கும் ரகமில்லை நான். கோயிலில் குத்துவிளக்காய் திரியும் சாத்வீகமும் இல்லை. இரண்டிற்கும் நடுவில் இருக்கும் ஒரு சராசரி பெண்.
Wednesday, February 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வாங்க வாங்க வாழ்த்துக்கள்.. நெறய எழுதுங்க... சந்தோஷம்
ReplyDelete:-) WARM WELCOME.....
ReplyDeleteHi.. Dear Indian Girl,
ReplyDeleteyou are most welcome here... plss continue...
Wish you all the Best.
* Sorry for not type in tamil
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteKarunanidhi News in Tamil | Karunanidhi News in Tamil